சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினருடன் முதல்வர் சந்திப்பு

லண்டனில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

வெளிநாட்டு தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக, லண்டன், அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளார். லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு லண்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் முதலமைச்சரை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, லண்டன் நேரப்படி காலை 9 மணி அளவில், இங்கிலாந்தில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணித்தர மேம்பாடுகளை கண்டறிந்து, அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தினரை முதலமைச்சர் சந்தித்தார். அப்போது, சுகாதாரத்துறை தொடர்பான 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Exit mobile version