மக்களுக்கான ஒரே கட்சி அதிமுக என்று முதல்வர் பெருமிதம்

வேலூரில் 500க்கும் மேற்பட்ட திமுக மற்றும் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள், முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

வேலூர் மாவட்டத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்கு பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனின் உறவினர்கள், மற்றும் காங்கிரஸ், அமமுக மாவட்ட செயலாளர் வாசு உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், அதிமுகவில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மக்களுக்காக துவக்கப்பட்ட இயக்கமே அதிமுக, இதில் அனைவரும் இணைவதன் மூலம் கட்சி பெருமை அடைவதாகவும், வலு அடைவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version