இலங்கை அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இலங்கை அதிபர் மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இலங்கை அதிபர்  மைதிரிபால சிறிசேனா , பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆகியோர் தலைமையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இலங்கையில் அமைதியும் வளமும் நிலைத்திருக்க வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். மேலும் மாணவர்களின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ராஜபக்சே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version