சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி இரவு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம்சிங் என்பவரது 2 வயது குழந்தை மர்ம நபரால் கடத்திச் செல்லப்பட்டது. இது குறித்து குழந்தையின் தந்தை ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்தனர்.

அதில் குழந்தையை ஆண் ஒருவர் கடத்திச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிசி காட்சிகளின் உதவியோடு, குற்றவாளியை தேடும் பணி மும்முரமாக நடைபெற்றது. சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள மர்ம நபர் குறித்து விவரம் தெரிந்தால், 1512 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் ரயில்வே காவல்துறை சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து காணாமல் போன குழந்தை திருப்போரூரில் தனிமையில் தவித்துக்கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தையை மீட்ட ஒருவர், காப்பகம் ஒன்றில் ஒப்படைத்துள்ளார்.

Exit mobile version