பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட, பிறந்து 6 நாட்களான பச்சிளம் ஆண் குழந்தையை போலீசார் 10 மணி நேரத்தில் மீட்டனர்.

பொள்ளாச்சியை அடுத்த நரிக்கல்பதியை சேர்ந்தவர் பாலன். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை மர்ம நபர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து கடத்தி சென்றதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலீசார், குழந்தையை கடத்திய பெண்ணை கோவை, திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பாகுதிகளில் தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில், குழந்தையை கடத்தியது உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ரங்கசாமியின் மனைவி மாரியம்மாள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து மாரியம்மாளை கைது செய்த போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

Exit mobile version