குழந்தை கடத்தலில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் – ரஜினிகாந்த்

 

குழந்தை கடத்தலில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று, நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

குழந்தைகள் நலத்திற்காக சென்னையில் தயா அறக்கட்டளை சார்பில் புதிய அமைப்பு ஒன்றை லதா ரஜினிகாந்த் தொடங்கினார்.

இந்தநிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், குழந்தையின் சிறப்புகளை எடுத்துரைத்தார். நாட்டிற்கு தண்ணீர் எப்படி அவசியமோ, அதைப்போன்று குழந்தைகளும் மிகவும் அவசியம் என்றார்.

இந்த அமைப்பின் புரவலராக டாடா அறக்கட்டளை செயல்படுவதாக குறிப்பிட்ட ரஜினிகாந்த், சாலைகளில் பிச்சையெடுக்கும் குழந்தைகளின் பின்னணியில் மாஃபியாக்கள் இருப்பதாக கண்டனம் தெரிவித்தார்.

குழந்தை கடத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினார்.

Exit mobile version