நாகை சென்றார் முதலமைச்சர்

புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை சென்றடைந்தார்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரைக்கால் விரைவு ரயிலில் நாகை சென்றடைந்தார்.

இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட அவர், இன்று காலை நாகை ரயில்நிலையம் சென்றடைந்தார்.அவருக்கு நாகை ரயில் நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version