கடலூர், நாகை மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம்!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதுடன், வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார். இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று காலை கடலூருக்கு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டப்பணிகளையும் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார். பின்னர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுயவுதவிக் குழுவினர் உள்ளிட்டோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

 

Exit mobile version