தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை !

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

பருவ மழை காலத்தில் பரவக் கூடிய காய்ச்சல்களை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சுகாதாரத்துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து மருத்துவ முகாம் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

Exit mobile version