ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர்

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழைகளுக்கு குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கான ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வாரியாக கணக்கெடுப்பு நடைபெற்று விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Exit mobile version