விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி முதல்வர் ஆலோசித்து அறிவிப்பார் -துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் எனவும் துணை முதலமைச்சர் ஓ, பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

 

 

Exit mobile version