உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்க முதலமைச்சர் தயாராகவே உள்ளார்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பதை பார்த்து அசந்து போய் உள்ளதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரம் முடிவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், இதற்கு முன்பாக காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை தொடர்பான கேள்விகள் கட்டாயம் இடம் பெறும் என்றும், ஆனால் நீண்ட காலமாக இந்த மூன்று துறைகள் தொடர்பான கேள்விகள் வருவதில்லை என்றார். முதலமைச்சர் திறமையாக பதில் அளிக்கக் கூடியவர் என்றும், சட்டப்பேரவையில் அவர் பேசுவதை பார்த்து பலமுறை அசந்து போய் உள்ளதாகவும் துரைமுருகன் கூறினார்.

துரைமுருகனுக்கு பதிலளித்த அவை முன்னவரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளிக்க முதலமைச்சர் தயாராகவே இருப்பதாக கூறினார். இனி முதலமைச்சரின் துறைகள் தொடர்பான கேள்விகள் இடம்பெறும் என்று பேரவையில் அவர் தெரிவித்தார்.

Exit mobile version