மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்த நாளை யொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை அலுவலகம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதா திருவுருவச் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வெளியிட்டனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு கார் ஒன்றையும் அவர்கள் வழங்கினர். பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு இருவரும் இனிப்புகளை வழங்கினர். கட்சி அலுவலகத்தில் மருத்துவ முகாம், அன்னதானம், மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். பின்னர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் இணைந்து, பிறந்தநாள் விழா கேக்கை வெட்டிக் கொண்டாடினர்.

Exit mobile version