வருகிற 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர், தண்ணீர் திறந்து வைக்கிறார்!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வருகிற 12ஆம் தேதி தண்ணீர் திறந்து வைக்கிறார்.

மேட்டூர் அணையில் இருந்து குறுவை நெல் சாகுப்படிக்காக தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதற்கு ஏதுவாக குடிமராமத்து பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு நியமித்து இருந்தது. தற்பொழுது பல்வேறு மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கிறார்.

Exit mobile version