கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம்

கஜா புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

கஜா புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் புயல் நிவாரணம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, புயல் பாதிப்பு குறித்த உத்தேச மதிப்பை அளிக்க உள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய அரசிடம் நிதி உதவி கேட்க முதலமைச்சர் கடிதம் எழுதுவார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்வது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Exit mobile version