இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை

இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் பொறுப்பாளர்களுடன், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Exit mobile version