ஐபிஎஸ் அதிகாரிகளை நிற்கவைத்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட ஸ்டாலின்! இதுதான் விடியா அரசின் ’பாராட்டு விழா’ லட்சணமா?

chess olympiad

திரைப்படத் துறையினரை அமரவைத்தும், ஐபிஎஸ் அதிகாரிகளை நிற்கவைத்தும், ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு உதவிகரமாக இருந்த தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை பாராட்டும் நிகழ்ச்சி, சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டபோது, திரைத்துறையினர் அமர்ந்திருந்த நிலையில், குடிமைப்பணியில் வெற்றிபெற்று ஐபிஎஸ் அதிகாரிகளாக உள்ளவர்கள் நின்று கொண்டிருந்தனர். இது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version