சென்னை ஆர்.கே. நகரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இளைஞர்

சென்னை ஆர்.கே. நகரில், ஆட்டோ ஒட்டுனரை கொடூரமாக கொலை செய்து விட்டு முட்புதரில் வீசிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான காலி மைதானத்தில், உடல் முழுவதும் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலத்தை, மர்ம நபர் ஒருவர் புதரில் வீசிச் சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி சிறுவர்கள், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் தண்டையார் பேட்டையைச் சேர்ந்த மூர்த்தி என்பது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Exit mobile version