சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டுள்ளார்!!

சமூக வலைத்தளங்கள் மூலம் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த காசியை மீண்டும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ள நிலையில், பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாகர்கோவிலை சேர்ந்த காசி என்பவர் சமூக வலைத்தளங்கள் மூலம் பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி பண மோசடி செய்து வந்துள்ளார். மேலும் அந்த  பெண்களுடன் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்துள்ளார். இது தொடர்பாக பெண்கள் அளித்த தொடர் புகாரால் காவல்துறையினர், காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து காசிக்கு உதவி செய்த அவரது நண்பர் டேசன் ஜினோ என்பவரையும் கைது செய்தனர். ஏற்கனவே 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட  நிலையில், காசி தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளி வருவதால் மேலும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் விசாரணை வளையத்திற்குள் காசி கொண்டு வரப்பட்ட நிலையில் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Exit mobile version