காவலாளி கொலை வழக்கில் 4 பேர் சரண்

நாமக்கல்லில் காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் 4 பேர் சரணடைந்தனர்.

முதலைப்பட்டி பைபாஸ் ரோட்டில் யுவராஜ் என்பவருக்கு சொந்தமான கார் பட்டறை உள்ளது. பட்டறையில் காவலாளியாக பணிபுரிந்து வந்த பழனி என்பவர் கடந்த 14ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், முதலைப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் முன்னிலையில் 4 பேர் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டதும் ஆள் மாறாட்டத்தில் பழனியை கொலை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version