டெல்லியில் எதிர்க்கட்சிகள் நாளை தர்ணா போராட்டம்

மம்தா பானர்ஜி மற்றும் சந்திரபாபு நாயுடு தலைமையில் நாளை எதிர்க்கட்சிகள் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர், மத்திய பாஜவு அரசுக்கு எதிராக, மாநில முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சட்டத்தை பாதுகாக்கவும், கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரியும் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து இருந்தார். அதன்படி நாளையும், நாளை மறுதினமும் மம்தா பானர்ஜி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளார். இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்ள உள்ளார்.

Exit mobile version