பெண்களின் பாதுகாப்புக்கு புதிய சட்ட மசோதா: ஆந்திர முதல்வருக்கு குவியும் பாராட்டு

 

பெண்களின் பாதுகாப்புக்காகத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்கார வழக்குகளை விசாரிக்க மாவட்டந்தோறும் விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், 21 நாட்களுக்குள் விரைந்து விசாரித்துக் குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாகத் தண்டனை வழங்கவும் வகை செய்யும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வர ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்களின் பாதுகாப்புக்காகத் தேவையான சட்டத் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் ஜெகன்மோகனுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

 

Exit mobile version