சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் உதவியாளர் வீட்டில் அதிரடி சோதனை: ரூ.2,000 கோடி வரி ஏய்ப்பு

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் தனி உதவியாளர் வீடுகள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடுவின் முன்னாள் தனி உதவியாளர் ஸ்ரீநிவாஸின் விஜயவாடா வீடு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் செயல்படும் 3 பிரபல கட்டுமான நிறுவனங்கள் உள்பட 40 இடங்களில் கடந்த 6 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, போலி ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்தது போல் ஆவணங்களை தயார் செய்தும், கணக்குகளை முறையாக பராமரிக்காமலும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சோதனையில் 85 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 71 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 25 வங்கி லாக்கர்களும் முடக்கப்பட்டுள்ளன.

Exit mobile version