சட்ட விரோதமான இடத்தில் கட்டிடம்; சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர அரசு நோட்டீஸ்

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடு சட்ட விரோதமாக கட்டப்பட்டது என்றும் உடனடியாக அதனை காலி செய்ய வேண்டும் என்றும் ஆந்திர அரசு நோட்டீஸ் அளித்துள்ளது.

சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா கட்டடம் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக கூறி ஆந்திர அரசு, சில தினங்களுக்கு முன் அதனை இடித்து தள்ளியது. இந்த நிலையில், கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடு வசித்து வரும் வீடும் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த வீடு இடிக்கப்படுவதால், சந்திரபாபு நாயுடு உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version