புயலால் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணி -தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு

கஜா புயல் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாகை அக்கரைபேட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு சிறப்பான முறையில் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக கூறினார்.

மேலும், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

 

Exit mobile version