கல்லூரி மாணவி படுகொலையில் சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை நெருங்கியுள்ளோம் – காவல்துறை

பொள்ளாச்சி கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை நெருங்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 6ஆம் தேதி ரத்த காயங்களுடன், தனியார் கல்லூரி மாணவி, கழுத்தறுக்கப்பட்டநிலையில், சடலமாக மீட்கப்பட்டார். கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் இளம்பெண்ணின் செல்போனில் கடைசியாக பதிவான தொலைபேசி எண்ணைக் கொண்டு உறவினர் மற்றும் சதீஷ்குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிசிடிவி காட்சி மூலம், குற்றவாளியை நெருங்கியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏடிஎஸ்பி மாடசாமி, பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் மற்றும் போத்தனூர் டிஎஸ்பி பாலமுருகன் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version