மதுரை கள்ளழகர் கோயில் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவு

மதுரை கள்ளழகர் கோயில் வளாகத்தை சுற்றிய இடங்களில் மது அருந்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான மண்டகபடிகளை, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க கோரி சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில், அழகர் கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்கு சொந்தமாக எத்தனை மண்டகபடிகள் உள்ளன? அதன் சொத்துக்கள் எவ்வளவு என்பது பற்றி பதிலளிக்க அறநிலையத்துறை ஆணையர், மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Exit mobile version