சிசிடிவி கேமரா பொருத்த ஒன்றரை லட்சம் கொடுத்த சிறுமி

சிசிடிவி கேமரா பொருத்த தனது சேமிப்பில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவிய சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சத்யநாராயணா. இவரது மகள் ஸ்ரீஹிதா சிசிடிவி கேமராக்கள் பொருத்த தனது சேமிப்பில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை வழங்கியுள்ளார். சிசிடிவி கேமராவால் போலீசார் பல குற்றவாளிகளை பிடித்துள்ளதாக கூறியதாகவும், ஆகவே தன்னால் முடிந்த, தனது சேமிப்பில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயை கொடுத்ததாகவும் சிறுமி ஸ்ரீஹிதா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் செயலை கேள்விப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சிறுமி ஸ்ரீஹிதாவை நேரில் அழைத்து பாராட்டினார்.

Exit mobile version