குளச்சல் சரகத்தில் 18 இடங்களில் சிசிடிவி பொருத்திய காவல் துறையினர்

குற்ற செயல்களை தடுக்க மூன்றாவது கண்ணாக கருதப்படும் சிசிடிவி புதிதாக பொருத்தப்பட்டு அதற்கான துவக்க விழா நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சரகத்தில் துணை கண்காணிப்பாளராக பணியற்றி வருபவர், கார்த்திகேயன், சமீபத்தில் சங்கிலி பறிப்பு, கொலை, கொள்ளை தடுப்பு பிரிவு பணிகளின் விசாரணை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களான 18 இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து தற்போது நடைபெற்ற சிசிடிவி கேமராக்கள் செயல்பாடுகள் துவக்க விழாவில், கண்காணிப்பாளர் ஸ்ரீ நாத், கார்த்திகேயனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பேசிய அவர் சிசிடிவி பொறுத்தினால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் குற்றசெயல்கள் வெகுவாக குறைக்கப்படும் என தெரிவித்தார்,

Exit mobile version