காட்பாடி ரயில் நிலையத்தில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்

காட்பாடி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, 5-வது பிளாட்பாரத்தில் பயணிகள் அமரும் இருக்கையின் கீழே கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளை சோதனை செய்ததில், கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு 25 கிலோ கஞ்சாவின் மதிப்பு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என போலீசார் தெரிவித்தனர். கைப்பற்றிய கஞ்சா போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Exit mobile version