வேனின் மேற்கூரையிலிருந்து 418 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை கிண்டியில் வேனின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவைக் காவல்துறையினர் கைப்பற்றினர்.

கிண்டியை அடுத்த பட்ரோடு அருகே கண்டோன்மெண்ட்க்கு சொந்தமான காலியிடம் உள்ளது. மர்ம நபர்களால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் இருந்து கஞ்சா வாசனை வரவே, அருகில் இருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில் வேனின் மேற்கூரையில் இருந்த ரகசிய அறையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சாவைக் கைப்பற்றிய அதிகாரிகள், வேனையும் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். வேனை விட்டுச் சென்ற நபர்களைக் கண்காணிப்பு கேமரா உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மொத்தம் 418 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதன் மதிப்பு 40 லட்ச ரூபாய் வரை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version