ஆந்திராவில் ரூ. 3 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகேயுள்ள நரசிப்பட்டினத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிரக் வாகனம் ஒன்றில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 2,500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 3 கோடி ரூபாயாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக மூன்று நபர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2,500 கிலோ அளவுக்கு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version