இலவச அரிசி கொடுப்பது தவறு என விஜய் நேரில் சொல்லிவிட்டு நடமாடிட முடியுமா – ஓ.எஸ்.மணியன்

இலவச அரிசி கொடுப்பது தவறு என சினிமாவில் சொல்லாமல் நேரில் எங்காவது சொல்லிவிட்டு விஜய் நடமாடிடா முடியுமா என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் கட்சி நிர்வாகி திருமணவிழாவில் கலந்து கொண்ட பின் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு, 13 வகையாக இலவச பொருட்கள், மக்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், 20 கிலோ அரிசி போன்ற பல்வேறு இலவச திட்டங்கள் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து செயல்படுத்தியதாக தெரிவித்தார்.

இந்த திட்டங்கள் அனைத்தையும் சர்கார் படத்தில் நடிகர் விஜய் கொச்சைப்படுத்தி உள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

 

Exit mobile version