இடைத்தேர்தல் என்பதே ஒரு சாக்கடை – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு !

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.ஸ். இளங்கோவன், எப்போதும் முரண்பாடான கருத்துக்களை பேட்டிகளில் கூறி கண்டனங்களை வாங்கிக்கொள்வது வாடிக்கை. அந்த வகையில் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்கள் ஒரு சாக்கடை என்றும், அதில் பணம் தான் பிரதானமாக இருந்து வெற்றியை தீர்மானிக்கும் என்றும் அவர் ஏற்கெனவே தெரிவித்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

இடைத்தேர்தலை சாக்கடை என்று கூறும் இளங்கோவன் இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்றும், அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாங்களும் அவருக்கு தேர்தலில் பதில் சொல்வோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version