இடைத் தேர்தல் தொடர்பாக கிடைக்கப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – தலைமைத் தேர்தல் அதிகாரி!

ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை இன்றைக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்கள் தீவிரமாக வாக்குகளை செலுத்தி வருகிறார்கள். இந்த இடைத் தேர்தலில் ஆங்காங்கே முறைகேடுகள் எழுந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பணப்பட்டுவாடா, ஓட்டுப்போடும் மிசினில் முறைகேடு, செய்தியாளர்களை மிரட்டுவது, வாக்காளர்களை மிரட்டுவது போன்ற விவகாரங்களில் ஆளுங்கட்சியினர் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா வழியாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பார்வையிட்டு வருகிறார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்குத் தொகுதியிலிருந்து கிடைக்கப்பெறும் புகார்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

Exit mobile version