நிறைவடைந்தது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலானது இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. தொடர்ந்து பரபரப்பாக நடந்துவந்தது. மக்கள் பெருந்திரளாக வந்து தங்களது வாக்கினை செலுத்தினார்கள். முதல் தலைமுறை வாக்காளர்களில் இருந்து மூப்பு எய்தியவர்கள் வரை பலர் இந்தத் தேர்தலில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். தற்போது மாலை 6 மணியுடன் இந்த வாக்களிப்பானது முடிந்து நிறைவை எட்டிவிட்டது. கடந்த 2021 பொதுத் தேர்தலைவிட கூடுதலான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் மார்ச் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Exit mobile version