2019 ஏப்ரல் மாத்திற்குள் தமிழ் இருக்கை முழுமையாக இயங்கத் தொடங்கும் – அமைச்சர் பாண்டியராஜன்

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை முழுமையாக இயங்கத் தொடங்கும் என தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

சென்னை மயிலாப்பூரில் திருமுறை செப்பேட்டுத் திருப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் ஹார்வார்டு பல்கலையில் தமிழ் இருக்கை முழுமையாக இயங்க தொடங்கும் என்றார்.

 

 

 

Exit mobile version