தொழிலதிபர் வீட்டில் 417 சவரன் நகை, ரூ.8 பணம் கொள்ளை

மதுரையில் தொழிலதிபர் வீட்டில் 417 பவுன்நகை, 8 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் காமராஜர் புரத்தைச் சேர்ந்த விறகு கடை தொழில் நடத்தி வருபவர் தங்கவேலு. இவர் தனது மனைவியுடன் வெளியில் சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 417 பவுன் நகை, 8 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து கீரைத்துரை காவல் நிலையத்தில் தங்கவேலு புகார் அளித்தார். இரண்டு பிரிவுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version