News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

கோயம்பேட்டில் இருந்து 27 மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கம்

Web Team by Web Team
June 28, 2021
in TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
கோயம்பேட்டில் இருந்து 27 மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கம்
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் புதிய தளர்வுகளின் படி 27 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கியது. பெரும்பாலான மாவட்டங்களில் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். 

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அரசு பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். பழநி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு 22 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. விடுப்பில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணிக்கு திரும்பாததால் அரசு பேருந்துகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 788 பேருந்துகளில் 470 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பெரும்பாலான பேருந்துகள் 100 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

விழுப்புரத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டதால், பெரும்பாலான பேருந்துகள் காலியாக சென்றன. சென்னைக்கு அதிக பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், பிற மாவட்டங்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டதால் அந்த மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கடலூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை குறைவாக இருந்ததால், குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. விழுப்புரம் மற்றும் சென்னை பேருந்துகள் மட்டுமே பெருமளவில் இயக்கப்பட்டன.

இதே போல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பேருந்துகளில் குறைவான எண்ணிக்கையில் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டனர். இதனால், பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் காலியாக சென்றன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 75 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகளின் வருகை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் 60 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: ChennaikoyambedunewsjnewsnowTamilnadutransport
Previous Post

உலக கோப்பை வில்வித்தை தொடரில் தீபிகா குமாரி ஒரே நாளில் 3 தங்கம் வென்று அசத்தல்

Next Post

ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் புகார்

Related Posts

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!

September 27, 2023
விழுப்புரத்தில் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் கவனயீர்ப்பு தீர்மானம்..!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக – பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?

September 26, 2023
பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!
அரசியல்

பராமரிப்பில்லாத பொதுக்கழிப்பறைகள்… சுகாதாரம் இழக்கும் சிங்கார சென்னை!

September 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?

September 25, 2023
Next Post
ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் புகார்

ஒரு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் புகார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version