பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாமதம்! பெண்கள் சாலை மறியல்

பெண்களுக்கு இலவச பேருந்து இயக்கி வருவதாக கூறி, விடியா அரசு அவர்களை தரக்குறைவாக நடத்தி வருகிறது. இந்நிலையில் கோவை சிவானந்த காலனி பேருந்து நிறுத்தத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும், பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அந்தப் பேருந்துகளை சிறை பிடித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விடியா ஆட்சியின் நிர்வாக லட்சணத்தை வெளிப்படுத்தும் இந்த விடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version