கரூரில் குறைந்த தொலைவுள்ள நகரங்களுக்கிடையேயான குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்த, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் , இந்த பேருந்துகள் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படுகிறது எனவும், இந்த குளிர்சாதன பேருந்துகள் தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 போக்குவரத்து கழகங்களிலும் இயக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால், உடனடியாக அந்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்.
Discussion about this post