கரூரில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவை தொடக்கம்

கரூரில் குறைந்த தொலைவுள்ள நகரங்களுக்கிடையேயான குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்த, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் , இந்த பேருந்துகள் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணத்தில் இயக்கப்படுகிறது எனவும், இந்த குளிர்சாதன பேருந்துகள் தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 போக்குவரத்து கழகங்களிலும் இயக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், பண்டிகை காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால், உடனடியாக அந்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என கூறியுள்ளார்.

Exit mobile version