மேற்கு ஆப்கானிஸ்தானில் பேருந்தில் குண்டு வெடித்து 34 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத்-காந்தஹார் இடையே சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான்களால் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டது. சமீப காலங்களாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு செய்தி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஹெராத்- காந்தஹார் இடையே பயணித்து கொண்டிருந்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சில், பேருந்தில் பயணித்த 34 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Exit mobile version