உத்தர பிரதேசத்தில் கழிவுநீர் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து விபத்து

உத்தர பிரதேசத்தில் பேருந்து கால்வாய்க்குள் பாய்ந்த விபத்தில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு இரண்டடுக்கு பேருந்து ஒன்று லக்னோவில் இருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்தது. ஆக்ரா அதிவிரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்பு சுவற்றை உடைத்துக்கொண்டு கழிவு நீர் கால்வாயில் விழுந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 29 பேர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் காயமடைந்த் பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version