சிதம்பரம் அருகே வாய்க்காலில் கவிழ்ந்த பேருந்து

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வாய்க்காலில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில் 25 பேர் படுகாயமடைந்தனர்.

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தது. சிதம்பரம் அடுத்துள்ள வேளக்குடி என்ற இடத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர கால்வாய்க்குள் பாய்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பயணிகளை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பெண்கள் உள்ளிட்ட 25 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 8 பேர் மேல்சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version