அந்தமான் கடலில் தீவிரமடைந்துள்ளது 'புல் புல்' புயல்: வானிலை ஆய்வு மையம்

அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புதிய புயலாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய புயலுக்கு “புல் புல்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வடமேற்கு திசையில் ஒரிசா மற்றும் மேற்குவங்க கடற்கரையை நோக்கி புயல் நகரக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்தப் புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் இன்று மத்திய வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version