வேறு சமூக பெண்ணை காதலித்தால் தம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன்

மேட்டுப்பாளையத்தில் வேறு சமூக பெண்ணை காதலித்தால் தம்பியை ஆணவக் கொலை செய்த அண்ணன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். அங்குள்ள மார்கெட்டில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்தாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறியநிலையில், கனகராஜின் தந்தை இருவரையும் வேறு இடத்தில் தங்க வைத்ததாக தெரிகிறது. இந்தநிலையில், கனகராஜ் தங்கியிருந்த பகுதிக்கு சென்ற அவரது அண்ணன் வினோத்குமார், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது எனக் கூறி தம்பி கனகராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் சராமாரியாக வெட்டிய வினோத்குமார், தலைமறைவானார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வர்ஷினி பிரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வினோத்குமாரை தேடி வந்தநிலையில், மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் அவர் சரணடைந்தார்.

Exit mobile version