வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் ரூபாய்கள் கைவரிசை

கோவையில் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 லட்ச ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஆதாம் ஷா, கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்தினருடன் தூத்துக்குடிக்கு சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 100 சவரன் தங்க நகைகள், 10 லட்ச ரூபாய் கொள்ளை போயிருந்தன. இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version