அடுத்தடுத்து 10 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜெ.என்.சாலை, வி.எம்.நகர் மற்றும் பூங்கா நகர் பகுதிகளில், அடுத்தடுத்து 13 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். மளிகை கடை, கூல் டிரிங்க்ஸ் கடை, பேக்கரி , நகை கடை போன்ற 10 கடைகளின் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை, அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர், அங்கு பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version