கடன் வாங்கி தருவதாக கூறி திமுக பிரமுகர் மோசடி

சென்னை வில்லிவாக்கத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் வரை மோசடி செய்த திமுக பிரமுகர் முத்துவேலை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்…

முத்துவேல் என்பவர் ஏழை மக்களிடம் கடன் வாங்கி தருவதாகவும், என்.ஆர்.ஐ. பிரமுகர்களிடம் நெருங்கிய தொடர்பு உள்ளதாக அப்பகுதியில் உள்ள தொழிலதிபர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் அப்பகுதியில் பிரபலமானவராக தன்னை காட்டி கொண்டு வந்துள்ளார், இதனையடுத்து பொதுமக்களிடமிருந்தும், கட்டிட நிறுவன உரிமையாளர்களிடமிருந்தும் மிரட்டி பணம் வசூலித்து வந்துள்ளார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு வந்த புகாரையடுத்து திமுக பிரமுகர் முத்துவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவர் மீது கொலை,  வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.அவரிடமிருந்து ஐந்து கார்கள், நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version